
வாஸ்து பயிற்சி வகுப்பு கட்டுரைகள்.
ஆயாதி கணித அமைப்பும் வாஸ்துவும் என்ற தலைப்பில் ஒரு சில விளக்கங்களை உங்களின் பார்வைக்காக தெரிவிக்கின்றேன்.
என்னைப் போன்ற வாஸ்து நிபுணர்கள் வாஸ்துவில் சில்ப சாஸ்திரம் என்பதே வாஸ்துவாகவும், அப்படி வாஸ்து அமைப்பாக அமைக்கும் கட்டிடம் எப்படிப்பட்ட அமைப்பாக வரவேண்டும் அதாவது, ஆற்றில் கொட்டினாலும் அளந்து கொட்டு என்கின்ற முறை என்பது ஒன்று வேண்டும். ஆக அளவு என்பதனை நிர்நயம் செய்யும் ஒரு முறையே ஆயாதி கணித அமைப்பின் குழிகணித சாஸ்திரம் ஆகும்.
ஆயாதி சார்ந்த அளவுகளை சொல்லாமல் சில்ப சாஸ்திரம் என்று சொல்லக் கூடிய வாஸ்து மட்டுமே பார்க்கும் ஒரு சில வாஸ்து நிபுணர்கள் ஆயாதி என்பது காலத்திற்கு ஒவ்வாத விசயம் என்று கூறினாலும், என்னைப் போன்று வாஸ்துவில் ஆயாதி கணிதம் தெரிந்து இல்லங்களை அமைத்து கொடுக்கும் வாஸ்து நிபுணர்களிடம் வாதத்திற்கு வரவேண்டும்.
அதனை விடுத்து பொதுவாக தவறு என்று கூறுவது பூனை கண்ணை மூடினால் உலகம் இருட்டு என்பது போல அறியாமல் சொல்வது ஆகும். வாஸ்துவில் ஆயாதி இல்லை என்று ஒரு சிலர் சொன்னால் அவர்களின் கணக்கில் கோயிலும் பொய் என்று சொல்வதைப் போலத்தான். ஆக எந்தவொரு ஆலயங்களையும் நமது முன்னோர்கள் ஆயதி கால்குலேசன் இல்லாது கட்டவில்லை.
இன்று தமிழ்நாட்டில் வாஸ்துவில் ஜாம்பவான் என்று சொல்லிக்கொண்டு வாஸ்து பார்பதற்காக லட்சக்கணக்கான பணத்தினை வாங்கிகொண்டு ஆயாதி இல்லாமல் சில்ப வாஸ்துவை மட்டுமே சொன்ன வாஸ்து நிபுணர்கள் அமைத்து கொடுத்த இடங்களில் அவர்கள் அழைப்பின் பேறில் சென்று புதிய அமைப்பாக ஆயாதி கணித அமைப்பை இணைத்த பிறகு தான் நன்றாக இருக்கின்றார்கள். இதனை விடக் மோசமான செயல் என்னவென்றால் ஒருகாலகட்டத்தில் ஒரு வாஸ்து சார்ந்த குழுவில் இருந்த காலகட்டத்தில் நானே ஆயாதி பொய் என்று சொன்னவன் தான்.
அப்பொழுது பக்கா வாஸ்துவில் அமைந்த எனது வீடு பலவிதமான கஷ்டங்களை கொடுத்தது.அதன் பிறகு எனது வீட்டில் என்ன தவறு உள்ளது.என்று ஆராயும்போது இந்த ஆயாதி கணிதம் என்பதனை காலத்திற்கு ஒவ்வாத விசயம் என்று விட்டுவிட்டோமே அதனை என்னவென்று நமது இல்லத்தில் பொறுத்தி பார்க்கலாம் என்று ஆராயும்போது, எனது வீடு வரவை விட செலவு அதிகம் உள்ள அமைப்பாக அமைந்து விட்டது. 2007ல் இருந்து இந்த ஆயாதி கணிதம் எனக்கு தெரிந்து இருந்தாலும்,ஒருசேர்க்கை என்கிற காலச்சூல்நிலை எனது கண்ணை மறைத்து விட்டது. அதே 2007 வாஸ்து துறைக்கு வந்த ஒரு வாஸ்து நிபுணர் அதனைப் பற்றி ஆயாதி கணிதம் தவறு என்று குறிப்பிடுவது தவறு ஆகும்.
அதன்பிறகு இன்று அந்த அமைப்பை எனது வீட்டில் மாற்றம் செய்த பின்னர் தான் எனது வாழ்வில் பணம் சார்ந்த விசயத்தில் மாற்றம் கிடைத்தது. ஒரு வாஸ்து நிபுணர்கூட தொலைக்காட்சி வழியாக சொன்னார் ஆயாதி வாஸ்துவில் உள்ள ஒரு வீட்டை வாஸ்து இல்லையென்று விற்பனை செய்யும் முடிவிற்கு வந்துவிட்டார்கள் என்று,அதாவது ஆயாதி பொய் என்று சொல்லாமல் சொன்னார்.இந்த இடத்தில் எனது கேள்வி என்னவெனில் நீயே மனையடி அளவு வேண்டாம் அது இருந்தாலும் தவறு கிடையாது.அந்த அளவுகளை எடுத்துக்கொளாள வேண்டிய அவசியம் கிடையாது என்று சொல்லும் போது உனது அகராதியில் ஆயாதி வேலைசெய்யாது எனும் போது அந்த இடத்தில் என்ன வேலை செய்தது நீ சொல்லும் வாஸ்து அந்த வீட்டை விற்காமல் காப்பாற்றி இருக்கலாம் அல்லவா.ஆட ஆயாதி பொய்யாகவே இருக்கட்டும். ஆனால் அது மனையடி அளவுகள் மட்டும் தானே சாஸ்திரம் என்ன சொல்கிறதோ அதனை வைத்துவிடுவது நல்லது தானே.வாஸ்து என்ன சொல்கிறது வீடு என்பது சதுரம் அல்லது செவ்வகமாக இருக்க வேண்டும் என்று சொல்கிறது.ஆயாதி கணித அளவுகளை நீங்கள் பயன் படுத்தும் போது இயற்கையாகவே அந்த அமைப்பு வந்து விடும்.என்ன அளவுகளில் ஆயாதி கணிதம் வரும் அமைப்பினை கொஞ்சம் கூட்டி அல்லது குறைத்து வைத்தால் முடிந்துவிட்டது. இவ்வளவு மட்டுமே ஆயாதி மனையடி குழிகணித அமைப்பு ஆகும்.
ஆக நமது தமிழகத்தில் ஆயாதி இல்லாமல் எந்த ஆலயங்களும் கிடையாது. வாஸ்து என்பது கோயிலில் இருந்து வந்தது தான்.ஆக வாஸ்து நிபுணர்கள் யாராக இருந்தாலும் ஆயாதி இல்லை என்று சொன்னால் இன்று இருக்கும் அத்தனை ஆலயங்களும் ஆயாதி கணிதத்தின் அடிப்படையில் அமைந்தது தானே .ஆக கோயிலில் உள்ள ஆயாதி பொய் என்று கூறுவார்களா.ஆக யாராக இருந்தாலும் தெரிந்தால் பேச வேண்டும் இல்லையெனில் மற்றவர்களின் வாழ்க்கையில் வாஸ்து என்கிற பெயரில் பணத்திற்காக விளையாடுவது மிகப்பெரிய பாவச்செயல்.
ஆக என்னைப் பொறுத்தவரை வாஸ்து இல்லாமல் ஆயாதி இல்லை. ஆயாதி இல்லாமல் வாஸ்து இல்லை இந்த இரண்டும் ரயில் தண்டவாளம் போலத்தான் இந்த இரண்டும் இணைந்து வாஸ்து சொன்னால் மட்டுமே நிறைவடைந்த வாஸ்து ஆகும்.
ஆயாதி இல்லாமல் பார்க்கும் வாஸ்து அரை வாஸ்து என்றுதான் சொல்லுவேன்.மீண்டும் வேறு ஒரு பதிவினில் சந்திப்போம்.
FOR MORE INFORMATION,
ARUKKANI.A.JAGANNATHAN.
[best vastu
consultant in tamilnadu]
Contact:
+91 83000 21122(speech)
+91 99650 21122(whatsapp)

வாஸ்து & ஆயாதி கணித வாஸ்து,
வீடுகளின் தேவபார்வை,குபேரபார்வை,
தெரிந்த தமிழக முதன்மை சூட்சும வாஸ்துநிபுணர்.
www.chennaivastu.com
www.suriyavasthu.com
www.bannarivastu.com
E-mail:jagan6666@gmail.com