
மதுவும் ஒரு மனிதனின் வாழ்வும்
மதுவின் காரணமாக மனித மூளையில் பேச்சு, செயல்பாடுகள், தீர்மானமெடுத்தல் ஆகியவற்றை நிகழ்த்துகிற பகுதிகள் பாதிக்கப்பட்டுவிடுகிறது. ஒருவர் பத்து நாட்களுக்கு ஒருமுறை குடிக்கிறார் என்றால், அவருடைய மூளை மதுவின் தாக்கத்திலிருந்து விடுபட்டு இயல்பாக இயங்கத்தொடங்குகிறது. ஆனால், அவர் மதுவின் மயக்கத்தில் வாழ்கிறார், அடிக்கடி குடித்துக்கொண்டே இருக்கிறார் என்றால், மூளையால் அந்தத் தாக்கத்திலிருந்து விடுபட இயலுவதில்லை. சிறிதுநேரத்தில் அவரது உடல் தெளிவாகிவிடலாம், ஆனால், மூளை எப்போதும் பாதிப்பிலேயே இருந்துவிடும். தொடர்ந்து மது அருந்துவதால் வரும் உடல்நிலை பாதிப்பை பற்றிய விளக்கத்தை பார்போம்,
புத்திசாலித்தனம் குறைதல்உயிரியல் மாற்றங்கள் ஒருபுறமிருக்க, மது அருந்தும் ஒருவர் பிறருடன் பழகுவதும் மாறிவிடுகிறது, அவரது உறவுகள் பாதிக்கப்படுகின்றன. இந்தியாவில் பெரும்பாலான குடும்ப வன்முறை நிகழ்வுகளும் சாலை விபத்துகளும் மதுவுடன் சம்பந்த ஆகிவிடுகிறது. மது அருந்துபவர்களுக்கு வரும் நோய்கள் மது அருந்தாதவர்களை விட உடல்நலப் பிரச்னைகள் இரண்டு மடங்கு அதிகம். தமிழ்நாட்டில் உடல்நலம் கெட்டுப்போய் மருத்துவமனைகளில் அனுமதிக்கப்படுகிறவர்களில் ஐந்தில் ஒருவர் மதுப்பழக்கத்திற்கு ஆளானவர்கள். காயம் காரணமாக மருத்துவமனைக்கு வருகிறவர்களைக் கவனித்தால், அவர்களில் மூன்றில் இரண்டு பேருக்குக் காயம் ஏற்பட்ட காரணம் மதுவாகவே உள்ளது, அதேபோல், மூளை அதிர்ச்சிக் காயத்தால் மருத்துவமனைக்கு வருகிறவர்களில் ஐந்தில் ஒருவர் மதுப் பிரச்னையாலேயே அந்த நிலைக்கு ஆளாகியுள்ளார்கள்.

மது அருந்துவோர் வன்முறையில் ஈடுபடும் வாய்ப்பு அதிகம், குறிப்பாக, அவர்கள் தங்களுடைய துணைவர்களிடம் வன்முறையாக நடந்துகொள்ளக்கூடும். இங்கே வன்முறை என்பது, உடல்சார்ந்த, பாலியல்சார்ந்த, உணர்வுசார்ந்த, பொருளாதாரம்சார்ந்த வன்முறையாக இருக்கலாம். மது அருந்துவோர் தற்கொலை செய்துகொள்கிற வாய்ப்பு அதிகம், அவர்கள் தவறான பாலியல் பழக்கங்களால் ஈடுபடுகிற வாய்ப்பு அதிகம், அவர்களுக்கு எய்ட்ஸ் நோய்த்தொற்று,காசநோய் மற்றும், உணவுக்குழாய்ப் புற்றுநோய், கல்லீரல் நோய் மற்றும் சிறுகுடல் புண் ஆகியவை வருகிற வாய்ப்பு மிகவும் அதிகம் ஆக மது அதிகம்.
ஆக மது சார்ந்த போதைப்பழக்கத்திற்கு ஆளாவதற்கு மனரீதியான காரணங்கள் இரண்டுவிதமாக எடுத்து கொள்ள வேண்டும். ஒன்று கிடைக்காத போது அந்த பழக்கம் ஏற்படுகிறது. இரண்டாவது அந்த வீட்டில் உள்ள நபர்கள் இவர்களை உதாசின படுத்தும் போது ஏற்படுகிறது. ஆக வாஸ்து ரீதியாக ஒருவருக்கு ஒன்று கிடைக்க வில்லை என்றாலே அது ஜோதிட ரீதியில் சுக்கிரன் சம்பந்தப்பட்ட விசயம் அந்தவகையில் ஒருவீட்டில் சுக்கிரன் ஆட்சி செய்யும் இடமாக தென்கிழக்கு எடுத்துக்கொண்டு வாஸ்து ரீதியாகவும் வேலை செய்யும். அப்பொழுது தென்கிழக்கில் என்ன வாஸ்து குறைகள் இருக்கிறது என்று பார்த்தால் மது சார்ந்த போதைப்பழக்கத்தில் இருந்து வெளியேறிவிடலாம்.
மேலும் விபரங்களுக்கு,
ARUKKANI.A.JAGANNATHAN.
இன்றைய நவீன வாஸ்து, ஆயாதி கணித வாஸ்து,
மனைகோல் சூட்சுமம், வீடுகண் திறப்பு,
வீடுகளின் தேவபார்வை,குபேரபார்வை,
தெரிந்த தமிழ்நாட்டின் முதன்மை சூட்சும வாஸ்துநிபுணர்.
www.chennaivathu.com
www.suriyavasthu.com
www.bannarivastu.com
E-mail:
jagan6666@gmail.com
Contact:
+91 83000 21122
+91 99650 21122(whatsapp)