
வீட்டின் வெளிப்புற தாய்சுவரும் பூமியின் ஆகர்சன சக்தியும்
வீட்டின் வெளிப்புற தாய்சுவரின் அளவை ஆயாதி கணனம் மூலம் நிர்நயம் செய்து பூமியின் ஆகர்சன சக்தியில் வீட்டை இணைக்கும் செயல் என்னவென்பதை நாம் பார்ப்போம்.
நாம் வாழ்ந்து கொண்டிருக்கும் இந்த பூமி என்கின்ற கிரகத்திற்கு ஆகர்சன சக்தி என்கிற துடிப்பு உண்டு. இந்த பூமியில் வாழும் நமக்கும், துடிப்பு என்பது உண்டு,இந்த பூமிக்கும் நமக்கும் வெளியே உள்ள இந்த பிரபஞ்சம் என்று சொல்லக்கூடிய வெளிபகுதிகளுக்கும் துடிப்பு என்பது உண்டு.
மனிதர்களின் துடிப்பு என்பது பிரபஞ்சம் என்று சொல்லக்கூடிய ஆகாயத்தில் உள்ள நட்சத்திரங்களின் துடிப்பை ஒத்து இருக்கும். ஆகவே அந்த நட்சத்திரங்களின் குணங்களும் நமக்கு வரும்.ஆகவே நமது துடிப்பும்,ஆகாயத்தில் உள்ள துடிப்பும்,இங்குள்ள பூமியின் துடிப்பும் ஒரே நேர் கோட்டில் அமைப்பதே ஆயாதி கணனம் என்று சொல்லக்கூடிய ஆயாதி மனையடி சாஸ்திர வாஸ்து கணிதம் ஆகும்.

ஒரு வீட்டில் பலர் இருந்தாலும் அந்த வீட்டில் உள்ள பெண்களுக்கு தனி இடம் உண்டு. ஏனெனில் பூமி என்பது பெண்ணிற்கு சமம் அந்தவகையில் ஒரு வீடு கட்டும் போது நட்சத்திர அடிப்படையில் பெண்களுக்கு மட்டும் பார்க்க வேண்டும். இல்லையெனில் பார்க்க வேண்டிய அவசியம்இல்லை என்றுதான் சொல்ல வேண்டும்.
வாஸ்து சாஸ்திரத்தின் பிரம்ம ரகசியமே கணிதம் தான்.ஏனெனில் கணிதம் இல்லையெனில் உலக இயக்கம் கிடையாது. அந்தவகையில் ஒரு வீட்டில் ஆயாதி கணிதப் பொருத்தம் மிகவும் முக்கியம் ஆகும்.இதன் பதினைந்து வகையான பொருத்தங்களில் மிகவும் முக்கியமான பொருத்தங்களான,கர்பம் என்கிற ஆகாய நிலைத்தன்மை மற்றும், பிரபஞ்ச சக்தியின் ஆகர்சன நிலைக்கான ஆதாய பொருத்தம் மற்றும், விரைய பலன்கள் குறைவாக இருக்கும் அமைப்பு, மற்றும் வம்ச, அம்ச, யோக, ஆயுள்,இப்படி ஏழு எட்டு முக்கிய பொருத்தங்கள் இல்லாமல் மனைகளை எக்காரணம் கொண்டும அமைக்க கூடாது. இநாத இடத்தில் வாஸ்து பார்பதும் இரண்டாவது இடம்தான. முதலிடம் மனைபொருத்தம் கட்டாயமாக இருக்க வேண்டும்.
மேலும் விபரங்களுக்கு,
ARUKKANI.A.JAGANNATHAN.
வாஸ்து & ஆயாதி கணித வாஸ்து,
வீடுகளின் தேவபார்வை,குபேரபார்வை,
தெரிந்த தமிழ்நாட்டின் முதன்மை சூட்சும வாஸ்துநிபுணர்.
E-mail:
Contact:
+91 99650 21122(whatsapp)