
திருக்கை வழக்கம் (கம்பர்).
திருவாகிய மங்கை கூடியே வாழுங்கை 1
கங்கை குலந்தழைக்கக் காட்டும் பெருங்கீர்த்தி
மங்கை பிரியாமல் வாழுங் கை – திங்கள் அணி – 2
சந்தனம் அரைக்கும் கை
மூர்த்தி நாயனார் போன்று விரிஞ்சிபுரசிறுவன்
எம்பிரான் எம்பெருமான் இந்திராதி பர்க் கரிய
தம்பிரா னுக்குரைத்த சந்தனக் கை – அம்பொன் – 3
முளைத்த நெல்லை சோறக்கி ஈந்தகை
இளையான்குடி மாற நாயனார்
வளைவாரி வையகமும் வானகமும் போற்ற
முளைவாரி வந்த முழுக் கை – கிளை வாழக் – 4
எச்சிற்கையால் கல்லெறிந்தகை
சங்கமங்கை சாக்கியநாயனார்
கச்சித் தலத் தரனைக் கல்லால் எறியமறந்து
எச்சில் தயிர்ச்சோ றெறிந்திடுங் கை – பச்சை மிகு – 5
ஈசற்கான மாவடுசிந்தி தன்தலையை அரிந்தகை
கணமங்கலம் அரவாட்தாய நாயனார்
தேமா வடுக் கமரில் சிந்திற் றன்றே கழுத்தை
ஆமா மெனவே அரிந்திடுங் கை – வாம மறை – 6
தொண்டர்பின் ஈசன் எனமுடிபு கொண்டகை
மலைநாட்டுச்செங்குன்றூர் விறல்மிண்டநாயனார்
ஓது புகழ் நாயனுடன் ஊரன் புற கென்றே
மோது தடிகொண்டு முடுகுங் கை – தீ தகல – 7
திருந்தி ஈசனுக்கே பூசைசெய் பெருந்தகை
திருநாவுக்கரசு நாயனார்
அஞ் செழுத்தே ஒன்றாகி அப்பர்எனத் தோன்றிஅரன்
செஞ்சரணத்தே பூசை செய்யும் கை – வஞ்சியர் பால் – 8
ஈசனை ஏவல்கொண்டோர் அளியுதவி மறுத்தகை
ஏயர்கொன் கலிக்காம நாயனார்
தூ தரனைத் தான்விடுத்த சுந்தரனைக் காணாமல்
பேதமறக் தன்வயிறு பீறும் கை – பூதத்தின் – 9
சுந்தரர்பொருட்டு நெற்சிவிகை தாங்கியகை
குண்டயூர் கிழார்
மிக்க புலவனுக்கா ஏகி மனை மட்டாகத்
தக்க சிவிகை கணை தாங்கும் கை – மைக் கடு வாய் – 10
வறுமையிலும் கிடைத்தநாகமணி ஈந்தபொற்கை
சடையப்ப வள்ளல்
மூக்கில் புகைபுரிந்த மூதரவின் வாயிடத்து
நீக்கிய கை நாக் கதனில் நீட்டுங் கை – ஆக்கமுடன் – 11
உழவுக்கே உளோம் என சாசனமிட்ட கை
ஏத மற்ற கீர்த்தியைக் கொண் டேட்டகத்திலே அடிமைச்
சாதனம் இட்டே கொடுத்த தங்கக் கை – மேதினியில் – 12
மகவு தாங்கிய பெண்டிரும் விருந்தினுக் குதவுங்கை
சூலி முதுகில் சுடச்சுட அப்போது சமை
பாலடிசில் தன்னைப் படைக்குங் கை – சாலவே – 13
தனிமையிலிறந்த பாணனுடலை ஈடேற்றியகை
தொண்டைநாட்டு மறவை வாழ் அரங்கேசன்
நாணம் தராமல் நடுங்காமல் கூசாமல்
பாணன் பிணத்தைப் பரிக்குங் கை – காணவே – 14
தானுண்டதும் கூழே என காட்டிய கை
செம்பியனுக்காக பேறையூரான் செய்கை
தண் தமிழோன் தன்மனத்தில் சந்தேகம் தீரக்கூழ்
உண்ட வயிற்றை பீறி ஊற்றுங் கை – கண் டளவில் – 15
நீலிக்கஞ்சிய வணிகனுக்கு உறுதியளித்த கை
தொண்டை நாட்டு திருவாலங்காட்டு குடிகள்
நீலி தனக் கஞ்சிநின்ற வணிகே சனுக்காக்
கோலி யபயம் கொடுக்குங் கை – ஆல மெனும் – 16
நீலியினால் வணிகனிறக்க நெருப்பினிலிறங்கிய கை
மேற்படி
வன்னியிடை முழ்கி வானோர் பழிகழுவிக்
கன்னி தனையே மணந்த காட்சிக் கை – துன்னு மொரு – 17
உற்றோர் செய்ததை தானும்செய்திறந்தகை
மேற்படி
பேருலகை எல்லாம் பிழைப்பிக்கும் ஓர்கொழுவின்
கூரில் ஒருவன் கழுத்தைக் குத்தும் கை – பா ரறிய – 18
தானுண்கலத்தில் கையமைத்துக் காத்திட்டகை
பறைமுழைநந்தன்சாம்பான்-போராவூர்வேளாளன்
வீறு பெறும் பறையன் வீயாமல் ஓர் கலத்தில்
சோறு பிசைந் துண்ட சுடர் மணிக் கை – ஆறாத் – 19
புண்ணைக்காட்ட சீனபட்டாடை கிழித்தகை
சோழனெதிரில் சடையப்பவள்ளல்
தொடையில் எழுசிலந்தி தோற்றுவிக்கப் பட்டின்
புடவை கிழித்த பெருங் கை – கடல் சூழ்ந்த – 20
நாற்படைசெல்ல வெந்தணலில் ஏற்பூட்டும்கை
பார்பூட்டு மன்னர் பரிகரி பூட்டக் கதிரோன்
தேர் பூட்ட ஏர் பூட்டும் செம்பொற் கை – வீரமதன் – 21
காமன் வெற்றிக்கு தாற்றுக்கோல் தாங்குங்கை
ஐங்கோல் தொடுக்க அணைகோ லெடுக்கஉழும்
பைங்கோல் பிடிக்கும் பதுமக் கை – இங்கிதமாம் – 22
மன்னன் கோல்தாங்க தாம்மேழி தாங்குங்கை
சீர் படைத்த பூபாலர் செங்கோல் பிடிப்பதற்கு
பேர்படைத்த மேழி பிடிக்குங் கை – கார்படைத்த – 23
உலகில் நல்லறிவு படர நாற்று விசிறுங் கை
மிஞ்சுமதி கீர்த்த்ியைப் போல் மேதினி எல்லாம் தழைக்கச்
செஞ்சாலி நாற்றை தௌிக்குங் கை – எஞ்சாமல் – 24
கள்ளம் புல்பூண்டொழித்துலகம் காக்குங்கை
வெள்ளைக் களை களைந்து வீறும் பயிர் தழைக்கக்
கள்ளக் களை களைந்த கற்பகக் கை – வள் ளுறையும் – 25
க்ஷஷபல்வகைப் போர் வெற்றிக்கும் மூலமாங்கை
விற்போர் மதகரிப்போர் வெம்பரிப்போர் வெற்றிப்போர்
நெற்போர் முதல் போர் நெறித்திடுங் கை – கற்பகம் போல் – 26
மேழி சிங்கம் குயில் முக்கொடிகள் தாங்குங்கை
மேழிக் கொடி சிங்க வெற்றிக் கொடி குயிலின்
வாழிக் கொடியே மருவுங் கை – நீ ளுலகில் – 27
வறியவர் வேதாகமபுராணம் தழைக்குங்கை
திருநின்றையூர் காளத்திவாண முதலியார்
ஆதுலர்குச் செம்பொ னளிக்குங் கை ஆகமங்கள்
வேத புராணங்கள் விரிக்குங் கை – நீதிநெறி – 28
பதினாறுபேறும் யாவரும்பெற உழைக்குங்கை
மானம் குலம் கல்வி வண்ணம் அறிவுடைமை
தானம் தருமம் தழைக்குங் கை – ஆன தமிழ் – 29
நலிந்தோர் நலமழிந்தோர் தாங்குங்கை
கல்லார்கள் என்னாமல் கற்றோர்கள் என்னாமல்
எல்லாரையுங் காத் தீடேற்றுங் கை – வல்லமை சேர் – 30
ஈடில்லாத ஈடுகொள்ளாது பயனளிக்குங்கை
மைம் மா முகில் உலகை வாழ்விக்கும் மேன்மைபோல்
கைம்மா றிலா தளித்த கற்பகக் கை – சும்மை ஆர் – 31
பலருண்ண பயன்பலபெற வாழும் சீராளர்கை
ஊருணி நீர் போல் உலகத்தவர்க் கெல்லாம்
பேரறிவால் ஈயும் ப்ரதாபக் கை – பாரில் – 32
உற்றபோது வுடனுதவும் தண்கை
உடுக்கை இழந்தவன் கை போல ஆங்கே
கோடுக்க இசைந்த குளிர் கை – இடுக்கணினால் – 33
மூவருக்கும் முதலான மூலமாங்கை
மாமறையோர் மன்னர் வணிகர் முதலாகத்
தாம் அலையாமல் கொடுத்துத் தாங்குங் கை – தே மருவு – 34
இயன்ற மாவையும் ஈந்த ஏழையின்கை
கம்பநாடரிடம் ஓர் வேளாளன்
நாவில் புகழ் கம்பநாடற் கடிமை யென்றே
மாவைக் கரைத்து முன்னே வைக்குங் கை – பாவலர் தாம் – 35
விடநாக கடியினில்மிளிர் நனிநாகரீக நற்கை
சடையப்ப வள்ளல் கை
ஏர் எழுபது ஓதி அரங்கேற்றுங் களரியிலே
காரி விடநாகங் கடிக்குங் கை – பா ரறியச் – 36
பஞ்சகாலத்தில் நீளும் பாசமுள்ளகை
குமிழம்பட்டு, இடையாலம் வாழ்ந்த வேளாளர்
சங்கை யிட்டுத் தள்ளாமல் தன் சோற்றை வந்தவர்க்குப்
பங்கை யிட் டிரட்சித்த பங்கயக் கை – பொங்கமொடு – 37
என்னளவாயினும் ஈந்து சொற் பிறம்பாதகை
பொன்விளைந்த களத்தூர் குடிதாங்கி முதலியார்
செம்பென் விளை களத்தூர் செந்நெல் விளைந்ததனை
நம்பி மறையோர்கு அளித்த நாணயக் கை – அம்பொன் – 38
வந்த பின்னும் வருமுன்னும் காக்குங்கை
விளை பயிரைப் பார்த்து விரைகால் புலத்தை
வளைய மதி லிட்டு வருங் கை – கள மதனில் – 39
எக்காலத்தும் ஈவோமென சாசனமிட்ட கை
ஏற்கவந்த ஆதுலர்க் கில்லை யென்னாமல் செம்பொன்
கார்க் கையினால் முக் கை யிட்ட கற்பகக் கை – தீர்க்கமதாத் – 40
ஈசனுக்கு திருப்பணிகள் பற்பலசெய் கொண்டற்கை
திருப் பருத்திக் குன்றில் சிவன் ஆலயங்கள்
விருப்புடனே கட்டுவித்த மெய்க் கை- திருப்புகழை – 41
கலைஞான பயிர்விளைக்குங் பெற்றிணைகை
எண்ணை எழுத்தை இசையை இலக்கணத்தை
வண்மை பெற உண்டாக்கும் வா குள கை – பண்ணமைந்த – 42
நன்னெறியும் தன்மொழியும் காக்குங்கை
இருமொழி ஞானம் படைத்த நம்மாழ்வார்
வேத மொரு நான்கினையும் மிக்க தமிழ் நாலடியால்
ஓதி உரைத்தே கருணை ஓங்கும் கை – பூதலத்தில் – 43
புலவனெதிர் படைத்தகனி உவக்குங்கை
பாவல னெச்சில் படு மாங்கனியை எடுத்
தாவலுடன் நன்றா கருந்துங் கை – காவலன் – 44
மன்னவன்கண் பெரியதெவை காட்டிய கை
அநபாயனுக்கு சிறார் பருவ சேக்கிழார்
மண்ணில் கடலில் மலையின் பெரிய தென
எண்ணி எழுதிக் கொடுத்த ஏற்றக் கை – திண்ணமதாய் – 45
தமிழின் புகழினுக்கு முடியையே ஈந்தகை
குன்றையூர் எல்லன்
வையக மெங்குந் தேடி வந்த தமிழோன் புகழச்
செய்ய முடியைக் கொடுத்த செம்பொற் கை – துய்ய புகழ் – 46
வேளான் வீரனின் வெற்றிக்கை
கருணாகரத் தொண்டைமான்
அட்ட திக்கும் எண்கீர்த்தி ஆயிரத் தெட் டாணைதனை
வெட்டி பரணிகொண்ட வீரக் கை – திட்டமுடன் – 47
வென்றிபெறு பொருளீட்டம் ஈந்த ஈகைக்கை
முனையடுவார் நாயனார்
பொன்னால் அமுதும் பொரிக் கறியும் தான் கொணர்ந்து
நன் நாவலர்க் களித்த நாணயக்கை – முன்னாள் – 48
வணிகன்தன் கவலை போக்கியகை
ஆறைநகர் பரமேசுவரன் மகன் எல்லன்
மனக் கவலை யுற்ற வணிகன் முன்னே நின்று
தனைக் கா எனக் கேட்ட தண் கை – கனக்கவே – 49
ஆனிரைகளை பலஅளிக்கும் பாங்கானகை
அன் றீன்ற நா கெழுபதான எருமைத் திறத்தைக்
கன்றோடு நல்கும் கடகக் கை – வென்றி தரும் – 50
பாடலுக்கு கலம் நெல்லளிக்குங்கை
ஓர் ஆனை நூராயிரக் கலம்நெல் ஓர் கவிக்குச்
சீராக நல்கும் தியாகக் கை – பே ரியலைச் – 51
பாலாற்றின் கால்பல செய்தாற்றிய ஆண்மைக்கை
சாற்றும் ஒட்டக் கூத்தன் சரச கவி சொல்லப் பால்
ஆற்றுநீர் கால் கொணர்ந்த ஆண்மைக் கை – நேர்த்திபெற – 52
சிவிகை உதைத்த புலவன் காலிற்கு பூணளித்தகை
தொண்டைநாட்டு வல்லம் கச்சியப்ப வள்ளல்
வண் தமிழோன் தான் உதைத்த வாகுள காலுக்குப் பொன்
வெண்டய மிட்டே வணங்கும் வெற்றிக் கை – புண்டரிகக் – 53
முடிமேல் குட்டிய புலவனுக்கு ஆழியிட்டகை
கையால் புலவன் கனகமுடி மேல் குட்டச்
செய்யாழி பண்ணி யிட்ட கை – நொய்ய – 54
அரிசிகேட்டயிடத்து யானையே அளிக்குங்கை
ஏகம்பவாணன்
எறும்புக்கும் ஆகாரந் தானில்லை என்ற மட்டில்
திறம் புக்க யானை தரும் செங்கை – பறம்பு தனில் – 55
முனிகளுக்கு அளித்துவந்த பண்பட்டகை
எண்ணாயிரம் முனிவர்க்கு ஏற்றபடி அப்படியே
பண்ணாக் கொடுக்கும் பராக்ரமக் கை – விண்ணாடர் – 56
விண்ணடைந்தோர் புகழினை ஏற்றுங்கை
கூர்த்த புகழ் அண்ட கோளம் அளவும் படர
நால் திக்கும் மேருவின் நாட்டும் கை – சீர்குகனை – 57
சிவன் முருகன் பிள்ளை மூவரையும் போற்றுங்கை
ஆதார மானவனை ஐங்கரனைச் சங்கரனைப்
பாதாரவிந்தம் பணியும் கை – நீதி – 58
படைத்து காத்து ஈந்து இடர்களையயும் ஈரக்கை
நடக்கை இருக்கை நகைக்கை மிடி தீர்க்கை
கொடுக்கை செழுங்கை குளிர்க் கை- தொடுத்த தெல்லாம் – 59
எக்காலத்துமிடத்தும் ஈடேற்றும் இணையிற்கை
வேளாளர் குலத்துதித்த வல்லாளன்
சீராக உண்டாக்கும் செங்கைப் பெருங்கருணைக்
காராளர் கற்பகப் பூங் கை
திருக்கை வழக்கம் நிறைவு.